Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2021 21:43:36 Hours

221 வது பிரிகேட் படையினரால் ஜெயநகர் பகுதியில் கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

22 வது படைப்பிரிவின் 221 வது பிரிகேடின் 17 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் மீரிகம - பிரதேச சபையின் உப தலைவரின அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்தின் ஜெயநகர், சாகரபுர ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வெள்ளிக்கிழமை (17) வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 221 வது பிரிகேட் தளபதி கேணல் எம்டபிள்யூடீஎன் மெதிவக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 17 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி, மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.