Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2022 16:51:51 Hours

221 வது படைப்பிரிவின் படையினர் 1000 ‘மீ’ மரக்கன்றுகள் நடுகை

குச்சவெளி, பல்லவக்குளம் பகுதியில் 22 வது படைப் பிரிவின் கீழுள்ள 221 வது பிரிகேட் படையினர் மரநடுகைத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (21) ஆரம்பித்து வைத்தனர்.இத்திட்டத்தின் கீழ் 221 வது பிரிகேடின் 17 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் சிப்பாய்கள் 1000 'மீ' மரக்கன்றுகளை நட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்கள் கலந்து கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் இத்திட்டத்தின் வெற்றிக்கு முழு ஆதரவை வழங்கினர்.