27th February 2024 18:31:21 Hours
தமிழ் மொழி பாடநெறி - 1/23 நிறைவு விழா 2024 பெப்ரவரி 22 அன்று திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தமிழ் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு மாத பயிற்சியில் 50 படைவீரர்கள் பங்குபற்றினர்.