16th July 2024 12:20:30 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜூலை 13 அன்று 22 வது காலாட் படைபிரிவில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 சிவில் ஊழியர்கள் மற்றும் 16 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டன. மாலையில் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்குடனான இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.