09th October 2022 18:49:43 Hours
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்கள் புதன்கிழமை (5) கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் திருகோணமலை 22 வது படைப்பிரிவின் தளபதியாக சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 22 வது படைப்பிரிவின் தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன், அவர் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் படையினர்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.
புதிய தளபதி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றார்.
பின்னர், இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, புதிய தளபதி, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில், எதிர்காலத்தில் தனது படைப்பிரிவுக்கான எதிர்கால பணிகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 22 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.