24th July 2023 19:01:27 Hours
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (ஜூலை 17) 22 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு, வண. பலாங்கொட ரத தேரர் அவர்களால் 'அம தோர விவரவிய' என்ற தொனிப்பொருளில் தர்ம பிரசங்கம் நடத்தப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்பிரசங்கம் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி நடாத்தப்பட்டது.
ஆன்மிக முன்னேற்றத்திற்காக 700-க்கும் மேற்பட்ட முப்படைகளின் படையினர் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர். கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி மற்றும் பிரதி தளபதி, உட்பட காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரசங்கத்தை செவிமடுத்தனர்.