27th August 2024 19:27:43 Hours
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் கருத்தின் கீழ், 24 ஆகஸ்ட் 2024 அன்று ரேவத சிறுவர் இல்ல சிறார்களுக்கான கல்வி சுற்றுலா படையினர் ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டத்தில் 29 சிறார்கள் மற்றும் 3 விடுதி காப்பாளர்களையும் சிகிரியா மற்றும் தம்புள்ளை விகாரைக்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்வித்தனர். அதற்கமைய 22 வது காலாட் படைப்பிரிவினரால் பங்கேற்பாளர்களுக்கு காலை மற்றும் மாலை தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.