10th October 2024 17:40:13 Hours
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஒக்டோபர் 7 ம் திகதியன்று 212 வது பிரிகேட் தலைமையகத்தில் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம்சீ ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இரத்ததான நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் 173 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்த தானம் வழங்கினர்.