30th April 2024 19:52:52 Hours
இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களிடையே மன உறுதியை அதிகரிக்கும் நோக்கில் வெற்றிகரமான உளவியல் செயற்பாட்டு பட்டறை 2024 ஏப்ரல் 26 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவில் நடாத்தப்பட்டது.
ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பட்டறை அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அறிவார்ந்த அமர்வில் 21 வது காலாட் படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் 17 அதிகாரிகளும் 180 சிப்பாய்களும் கலந்துகொண்டனர். ரணவிருவா இதழின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.சுஜித் சாமிந்த அவர்கள் இராணுவ இலக்கியம் பற்றியும், மேஜர் எம்.எச்.எம்.எஸ். பண்டார அவர்கள் 'பெருமைமிக்க சிப்பாய்' என்பதன் சாராம்சத்தையும் கற்பித்தனர்.