08th March 2020 14:55:16 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனுராதபுர கல்குலம் பிரதேசத்தில் உள்ள 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எச் எல் வி எம் லியனகே அவர்கள் திங்கட் கிழமை (02) அம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்றார்.
அந்த வகையில் ரணசெவபுரவில் உள்ள படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இப் புதிய தளபதியவர்கள் இப் படைத் தலைமையக படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத அனுஷ்டானங்களின் பின் உத்தியோகபூர்வமாக தனது ஆவணத்தில் கையொப்பமிட்டு தமது கடமையை பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் இப் புதிய தளபதியவர்கள் இப் படைத் தலைமையக வளாகத்தில் மாமரக் கன்றை நட்டார். அதன் பின்னர் படையினருடன் உரையாற்றிய இப் படைப் பிரிவின் தளபதியவர்கள் 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கடமை பொறுப்புக்கள் தொடர்பாக படையினருக்கு தமது கருத்தை விளக்கினார்.
இந் நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் படைத் தலைமையகங்களின் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த படைப் பிரிவின் முன்னாள் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தின் பொது நிர்வாக பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | Archives des Sneakers