Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2025 09:13:53 Hours

2024/25 சிவனொளிபாத மலை யாத்திரை கெமுனு ஹேவா படையணியின் புனித ஊர்வலத்துடன் நிறைவு

2024/25 சிவனொளிபாத மலை யாத்திரை வெசக் பௌர்ணமி போயா தினத்தன்று (மே 12) நிறைவடைந்தது. கெமுனு ஹேவா படையணியின் படையினர் இறுதி மத நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

புனித யாத்திரை (சுமன சமன் கடவுள் ஊர்வலம்) இலங்கை இராணுவத்தின் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புனித நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் கடவுளின் சிலையை மரியாதையுடன் கொண்டு செல்லும் யாத்திரை சிவனொளிபாத மலை மேல் அறையிலிருந்து பலாபத்தல புராண விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாத்திரையின் நீடித்த ஆசீர்வாதத்தை குறிக்கும் வகையில், எரத்னா வழியாக அடவிகந்த ஆராமயாவிற்கு இணையான ஊர்வலமும் நடாத்தப்பட்டது.

ஆன்மீக சூழலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன, இறுதி மத நிகழ்வுகள் மற்றும் புனித யாத்திரையில் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.

கெமுனு ஹேவா படையணியின் இருநூறுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி கேணல் கே.எம்.என். திக்கும்புர ஆர்எஸ்பீ அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களின் ஒழுக்கமான நடத்தை 2024/25 சிவனொளிபாத மலை யாத்திரைக்கு கண்ணியமான மற்றும் சுமூகமான முடிவை உறுதி செய்தது.

கெமுனு ஹேவா படையணியின் இந்த வருடாந்த நிகழ்வு, நாட்டின் மத மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மேலும் இது நம்பிக்கை, சேவை மற்றும் தேசிய ஒற்றுமையின் பெருமைமிக்க அடையாளமாக காணப்படுகிறது.