06th October 2024 14:02:35 Hours
இலங்கை பீரங்கிப் படையணியின் 9வது களப் படையணியின் ஏற்பாட்டில் 2024 தமிழ் மொழிப் பாடநெறி இலக்கம் 01–க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி வெலிகந்த கலாசார நிலையத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சிங்கபுர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நெலும் வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 178 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் வண்ணமயமாக்கியதுடன், இந்நிகழ்வில் வெலிகந்த பிரதேச செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.