Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2018ஆம் ஆண்டிற்கான கூடைப் பந்தாட்டப் போட்டியில் 23ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையினர்; வெற்றி

24ஆவது படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான கூடைப் பந்தாட்டப் போட்டியில் 23ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையனிர் வெற்றியீட்டியதுடன் இப் போட்டிகள் அம்பாரை போர் பயிற்ச்சி மையத்தில் ஜனவரி மாதம் 9-10ஆம் திகதிகளில் நடைபெற்றது.

அந்த வகையில் இவ்விரு நாள்ப் போட்டியில் 24ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளை முன்னிலைப்படுத்தி 7குழுக்கள் போட்டியிட்டதுடன் இப் போட்டியின் இறுதிச் சுற்றில் 241ஆவது படைப் பிரிவுடன் போட்டியிட்டு 24ஆவது படைத் தலைமையகம் வெற்றியீட்டியது.

அந்த வகையில் 241ஆவது படைப் பிரிவின் சிறந்த பந்துவீச்சுக் குழுவாக 16ஆவது (தொண்டர்) இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் லெப்டினன்ட் பி ஆர் கே ரணவீர காணப்படுவதுடன் சிறந்த பந்தாளராக 23ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் ரய்பல்மென் ஜெ எம் பிரியங்கர காணப்படுகின்றார்.

இப் போட்டிகள் 24ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களில் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 24ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் சார்பாக .இப் படைத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரியான கேர்ணல் டி எச் தர்கீம் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

241ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டபிள்யூ சந்திரசிறி மற்றும் பல இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Authentic Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories