05th February 2024 17:23:41 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் 20 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் ‘மெத் சேவா அறக்கட்டளை’ மூலம் பராமரிக்கப்படுகின்ற வெல்லவாய, ஹதபங்கள பராமரிப்பு இல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு ஜனவரி 30 திகதியன்று வழங்கப்பட்டது.
20 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி நிகழ்வை ஒழுங்கமைக்க படையினருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கியதுடன், நாடளாவிய ரீதியிலான அனுசரனையாளர்களால் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஜி.எம்.என் செனவிரத்ன யூஎஸ்பீ, 20 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.