Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2021 19:42:04 Hours

2 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் அரச நிதியுடன் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீ்ழ் அமைந்துள்ள 11 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 111 வது பிரிகேட்டின் 2 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் கம்பளை பிரதேச செயலகத்தினால் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் தொழுவ பிரதேச செயலகத்தின் கம்பளை, புபுரெஸ்ஸ பகுதியில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளதுடன், புதிய வீட்டிற்கான சாவியும் சனிக்கிழமை (30) உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் 11 வது படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் உரிமையாளரான திருமதி கே.ஜி.சீதா குமாரிக்கான புதிய வீடு, சில வாரங்களில் கட்டப்பட்டது. மேலும் 111 பிரிகேட் தளபதி மற்றும் 2 (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பில் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வி்ல பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன, 11 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 111 வது பிரிகேட் தளபதி, தொழுவ பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் பலர் புபுரெஸ்ஸவில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டனர்.