Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:18:27 Hours

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் பல வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளை கொண்ட கட்டிடம் 27 ஏப்ரல் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீ.எஸ்.ஆர் பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கட்டிடத்தில் சிற்றூண்டிச் சாலை, சலூன் மற்றும் தையல் நிலையம், ஆகிய வசதிகள் காணப்படுகின்றன. திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.