21st August 2024 14:33:37 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் ஏற்பாட்டில் 16 ஆகஸ்ட் 2024 அன்று லக்சபான மத்திய கல்லூரியில் ‘கவி பன’ என்ற கவிதைப் பிரசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வு பொதுமக்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
வண. மணக்கதுரே பஞ்யசார தேரர் அவர்கள் தர்ம பிரசங்கத்தை கவிதை வடிவில் நிகழ்த்தினார். இந் நிகழ்வில் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் லக்சபான பிரதேசத்தின் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.