14th July 2024 06:37:22 Hours
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2024 ஜூலை 07 ஆம் திகதி கல்முனை கடற்கரையில் கரையோர சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, அப்பகுதியின் இயற்கை அழகை அச்சுறுத்தும் வகையில், மாசுக்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் போன்ற குப்பைகளை படையினர் அகற்றினர்.