16th August 2024 13:32:01 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாளிகாவிலவில் உள்ள ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 13 ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இவ் வீட்டின் நிர்மாணி பணி 18 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடைப்பெற்றதுடன் திரு.சமிந்த வெலேகம இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கினார்.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கலந்துகொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.