Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2024 08:20:54 Hours

18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 25 ஆகஸ்ட் 2024 அன்று கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

ஏறக்குறைய 500 மீட்டர் நீளமுள்ள கடற்கரையின் இயற்கை அழகை மீட்டெடுக்கும் வகையில், கழிவுகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.