12th June 2025 08:26:39 Hours
2025 ஜூன் 10 ஆம் திகதி கூரகல பிரிதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் துரிதமாக செயல்பட்டனர். தீயை கட்டுப்படுத்தவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் படையினர் செயற்பட்டனர்.
இப்பணி 61 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 572 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.