23rd October 2024 15:31:42 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 19ம் திகதி அன்று பம்பைமடுவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளர்.
இந்நிகழ்வில் 56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டு சாவியை பயனாளிக்கு வழங்கினார்.
இந்த திட்டம் INSEE சீமெந்து பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.சந்தன நாணயக்காரவின் அனுசரணையுடன் 562 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளியின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.