25th March 2024 15:10:37 Hours
17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் ‘சவால்களுக்கு அப்பால் பிள்ளைப் பருவத்தின் வெற்றியை அடையுங்கள்’ என்ற தொனிப்பொருளில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 22 மார்ச் 2024 அன்று வவுனியா சிறிசுமண வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தகவல் விரிவுரை வட மத்திய மாகாண தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் விரிவுரையாளரும் ஆலோசகருமான திருமதி எச்.எம்.டி.கே. செனவிரத்ன அவர்களினால் நடாத்தப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.எம்.எஸ்.ஜே. தென்னகோன் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.