Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 14:45:11 Hours

17 வது (தொ) இலேசாயுத காலாட் படையணியினால் தென்னம் பிள்ளைகள் நடல்

“வடக்கிற்கு இரண்டாவது தென்னை முக்கோணம்” என்ற கருத்தின்படி,17 வது (தொ) இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்ஜே பிரேமதிலக்க ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 08 ஏப்ரல் 2024 அன்று 17 வது (தொ) இலேசாயுத காலாட் படையணி படையினர் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். திரு.வீரபாகுஞானப்பிரகாசருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், உள்ளூர் சூழலை மேம்படுத்துவதற்கான ஒரு நிலையான முயற்சியைக் குறிக்கும் வகையில் இந்த திட்டம் நடைபெற்றது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் தோட்ட உரிமையாளர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.