30th December 2022 15:41:50 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி முகாம் வளாகத்திலும் கும்புறுப்பிட்டி பகுதியிலும் நிலவிய நீண்டகால பிரச்சினைக்கு தீர்வாக 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிர்மாணித்தனர்.
17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் பீ.ஜி,எல் ஹேமகுமார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஹொரணை பொடிலைன் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சதுரகுலரத்ன அவர்கள் வழங்கிய ரூபா 1,000,000 அனுசரணையுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் உள்ள 500 குடும்பங்கள் பயனடைகின்றன. பொடிலைன் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்களின் பங்குபற்றலுடன் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) நீர் சுத்திகரிப்பு நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.