29th April 2024 20:36:50 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் 11 வது கெமுனு ஹேவா படையணி, மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி திட்டத்துடன் இணைந்து நந்திமித்திர கிராமத்தின் 166 பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கும் திட்டம் 24 ஏப்ரல் 2024 அன்று முகாம் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தேவையான அனுசரணையை மீள்குடியேற்ற மற்றும் மறுமலர்ச்சி திட்டத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சர்வேஸ்வரன் வழங்கினார். 11 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி திட்டத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.