Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2021 23:10:37 Hours

1,625 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேற்றம்

இன்று காலை (06) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 869 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 53 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 816 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 98 பேர் களுத்துறை மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதுடன், 97 பேர் நுவரெலிய மாவட்டத்திலும், 83 பேர் கம்பஹா மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 538 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (06) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 266,498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 159,299 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (06) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,625 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர். ஜூலை மாதம் 04ம் திகதி இலங்கைக்குள் 32 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 18 பெண்களும் 14 ஆண்களும் அடங்குவர்.

இன்று (06) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 18 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 664 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர். இன்று (06) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,177 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (06) நடைமுறைக்கு வரும் வகையில் யாழ் மாவட்டத்தில் புங்குடுதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரந்தேனி (வடமேற்கு) கிராம சேவகர் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தொடாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஹபூகொட –கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபெத வத்த ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இன்று (06) காலை மட்டகளப்பு மாவட்டத்தின் ஏராவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏராவூர் 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.