31st December 2022 12:32:46 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 143 வது பிரிகேட்டின் 16 வது கஜபா படையணி படையினர்களின் அனுசரணையுடன் புத்தளம், தப்போவ பிரதேசத்தில் உள்ள இரண்டு வறிய குடும்பங்களுக்கு தலா ரூபா 15,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
இவ்விரு குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிச்சிலன், அவர்களின் ஒருங்கிணைப்பில் ஹட்டன் நஷனல் வங்கியின் உதவிப் பொது நிறைவேற்று அதிகாரி (சட்டம்) திருமதி துஷாரி ரணவீர அவர்களின் அனுசரணையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுசரணையை ஒருங்கிணைத்த 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்ஏடிபீ ஜயரத்ன அவர்கள் அந்த குடும்பங்களின் வீட்டு வாசலுக்குச் சென்று அரிசி, தானியங்கள், பால் மா பொதிகள், மிளகாய், கருவாடு, டின் மீன், உருளைக்கிழங்கு, பருப்பு, மசாலா, உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுகளை கொண்ட பொதிகளை கையளித்தார்.