01st June 2023 20:48:26 Hours
படையணிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டி - 2023 மே 25 முதல் 28 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் மல்யுத்த வீரர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 150 மல்யுத்த வீரர்,வீராங்களைகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில், இலங்கை சிங்கப் படையணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை பொறியியல் படையணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. புதியவர்கள் பிரிவில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சம்பியன்ஷிப்பைப் பெற்றுக்கொண்டதுடன், இலங்கை சிங்கப் படையணி இரண்டாம் இடத்தையும் வென்றது.
பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ மகளிர் படையணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை பொறியியல் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இந்நிகழ்வுக்கு 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியும், இராணுவ மல்யுத்தக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதிச் சுற்றுகளை பார்வையிட்டதுடன், வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மே 28 அன்று சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.