Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2023 19:05:02 Hours

144 வது பிரிகேட் படையினரால் அனுசரனையாளர்களின் உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

முல்லேரியாவ, அம்பத்தளை டிக்கிரி குமார வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 197 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், கற்றல் உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய எழுதுபொருட்கள் ஆகியன மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப் பிரிவின் 144 வது காலாட் பிரிகேட்டின் படையினரால் 2023 மே 03 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் வழங்கப்பட்டது.

144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்வி கொடிதுவக்கு அவர்களின் வேண்டுகோளுக்கமை ஹோகந்தர கங்காரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு சமந்த பெர்னாண்டோ அவர்கள் பாடசாலை பைகள் வழங்க நிதியுதவி வழங்கியதுடன், கொழும்பு ஆசிரி வைத்தியசாலையின் வைத்தியர் துருல் ஆட்டிகல, கற்றல் உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய எழுது பொருட்கள் வழங்க நிதியுதவி வழங்கினார்.

மேலும், பாடசாலை ஆசிரியர்களுக்கு சேலைகளும் இந் நிகழ்வில் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களு இராணுவத்தினரால் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்படுவதற்கு முன் மாணவர்களால் வண்ணமயமான நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

இத் திட்டமானது, 14 வது காலாட் படைபிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 144 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையில் 144 வது காலாட் பிரிகேட் படையினரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

144 வது காலாட் பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎம்ஆர்என்கே ஜயமான்ன ஆர்டபிள்யூபீ, கங்காரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பணிப்பாளரும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.