Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2024 15:17:07 Hours

141 வது காலாட் பிரிகேடினால் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

141 வது காலாட் பிரிகேட் 19 ஜூன் 2024 அன்று பிரிகேட் வளாகத்தில் "சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: சட்ட முன்னோக்குகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்.ஆர்.டி.எஸ். தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான விரிவுரையை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தினீஷிய பிரேமரத்ன அவர்களினால் நடாத்தப்பட்டது.