27th May 2024 17:21:13 Hours
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 23 மே 2024 அன்று பஸ்யால, ரதாவடுன்ன பகுதியில் புளிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர்டிஈஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 14 வது இலங்கை சிங்க படையணி படையினர் சம்பவத்திற்கு உடனடியாக விரைந்து அனைத்து மரக்கிளைகளை அகற்றினர். கம்பஹாவில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.