27th May 2024 17:25:09 Hours
வெசாக் பண்டிகையுடன் இணைந்து, 141 வது காலாட் பிரிகேட் 22 மே 2024 அன்று பிரிகேட் தலைமையக வளாகத்தில் தர்ம சொற்பொழிவு மற்றும் பலாக்காய் தானத்தினை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர் டி சில்வா தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆதரவுடன் இந் நிகழ்வு இடம்பெற்றது. வெசாக் தான நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், 6 வது இலங்கை களப் பீரங்கி படையணியினால் 23 மே 2024 அன்று மற்றுமொரு பலாக்காங் தானம், கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்பட்டது.