Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2024 12:52:46 Hours

14 வது காலாட் படைப்பிரிவின் உணவக கழக நிகழ்வு

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டார நாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஏப்ரல் 30 அன்று பொறியியல் சேவை படையணியின் அதிகாரிகளின் உணவகத்தில் உணவக கழக நிகழ்வு இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, 'தொழில்முறை மற்றும் அறிவுத்திறன் மூலம் இராணுவ மூலோபாயத் தலைமை' என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் விரிவுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் 125 சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.