Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2024 15:06:11 Hours

14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழு பெய்ரூட் தூதுவரை சந்திப்பு

லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ திரு கபில சுசந்த ஜயவீர அவர்களை 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவினர் 2024 மார்ச் 07 ம் திகதி பெய்ரூட் தூதுவர் இல்லத்தில் சந்தித்தனர்.

14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களை தூதுவர் அன்புடன் வரவேற்றதுடன் இரு தரப்பினரும் சுமுகமான உரையாடலை மேற்கொண்டனர். கடந்த வருடத்தில் லெபனான் ஐ.நா இடைக்காலப் படையின் அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினர்.

லெபனானில் கடமையாற்றும் போது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவிற்கு வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்காக தூதுவருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டதுடன் அன்றைய நிகழ்வு நிறைவுற்றது.

இந்த உரையாடலின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.