25th August 2023 20:12:26 Hours
விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ அவர்கள் 14 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக 21 ஓகஸ்ட் 2023 அன்று கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
14 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள் புதிய படைப்பிரிவின் தளபதியினை அன்புடன் வரவேற்றனர். புதிய தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், கடமையை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து புதிய தளபதி தனது நோக்கத்தினை பற்றி படையினருக்கான உரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.