Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2024 13:39:59 Hours

12 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிரமதான பணி

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 13 ஆகஸ்ட் 2024 அன்று வெடிஹிடி கந்த விகாரையில் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி ஒரு சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

வெடிஹிடி கந்த ரஜ மஹா விகாரையின் பிரதம பிக்குவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 20 வது இலங்கை சிங்க படையணி, 12 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினை சேர்ந்த 100 படையினர் கலந்து கொண்டனர்.