19th June 2019 14:25:50 Hours
பொசன் போயா தினத்தை முன்னிட்டு இம் மாதம் (16) ஆம் திகதி 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அந்தரஹஷ்வாவ முன்பள்ளியில் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களது பூரன ஏற்பாட்டுடனும், கொடையாளரான திரு மேனக ஜயவர்தன அவர்களது நிதியுதவியுடன் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் 271 பேருக்கு 10,000/= பெறுமதிமிக்க பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றுள் பாடசாலை உபகரணங்களான அப்பியாச கொப்பிகள், தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டு பெட்டிகள், பாடசாலை பைகள், பாடசாலை சீருடைகள், காலனி சோடிகள், செருப்பு ஜோடிகள், சித்திர கொப்பிகள், பென்சில்கள், பேனைகள் மற்றும் இனிப்பு பண்டங்களை உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த நன்கொடை வழங்கி வைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக மற்றும் நன்கொடையாளரான திரு மேனக ஜயவர்தன அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு இந்த நன்கொடை பொருட்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வினூடாக மாணவர்களுக்கு பகல் உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன. Buy Kicks | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092