20th September 2024 13:51:42 Hours
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எனகேஎச்ஆர் நாணயக்கார ஆர்டபிள்யூபீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது கெமுனு ஹேவா படையணி படையினர், 16 செப்டம்பர் 2024 அன்று வவுனியா கற்குளம் பிரதேசத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கட்டுமானத்திற்கான நிதியுதவியை சர்வதேச நீட்ஸ் லங்கா நிறுவனம் வழங்கியது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.