13th October 2024 19:07:31 Hours
12 ஒக்டோபர் 2024 அன்று சில்வர் கிராஸ் மருத்து நிலையத்தில் திகன சமூக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்ச்சியில் 11 வது காலாட் படைப்பிரிவு படையினர் கலந்துகொண்டனர்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது காலாட் படைப்பிரிவின் படையினர் இத்திட்டத்தில் இரத்த தானம் செய்யவதற்கு பிரதேச மக்களை ஒருங்கிணைத்தனர்.
கண்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் மருத்துவக் குழுக்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்வை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றினர். இது இராணுவத்திற்கும் உள்ளூர் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியது.