25th April 2023 18:10:20 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைபிரிவு புதன்கிழமை (19) கண்டி தேசிய வைத்தியசாலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுவையான மதிய உணவு வழங்கியது.
இந்த திட்டம், கண்டி அஸ்கிரிய மகாவிஹாரையின் வண. ஷீலானந்த தேரர் அவர்களின் ஒத்துழைப்புடன் 11 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய, 11 வது காலாட் படைபிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் உதவியுடன் புத்தாண்டு விருந்து வழங்கப்பட்டதுடன் அவர்கள் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வார்டுகளுக்கு சென்று பரிசுப் பொதிகளை வழங்கினர். இத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் ஆசீர்வாதம் வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.