20th February 2024 12:45:31 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ், 11 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் 2024 பெப்ரவரி 16 ஆம் திகதி நாவட்குழி லக்தரு பாலர் பாடசாலையின் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, 11 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஜி.சி.கே குடாகமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. மதிய உணவை ஏற்பாடு செய்த இராணுவ வீரர்களுக்கு லக்தரு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.