05th December 2024 21:03:51 Hours
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 10 வது இலங்கை சிங்க படையணி படையினர் முல்லைத்தீவு, கொக்கிளாய், புனித அன்னை தேவாலயத்தில் 30 நவம்பர் 2024 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கினர்.
இத்திட்டத்திற்கு மனுசத் தெரண மற்றும் டயலொக் ஆக்சியாட்டா ஆகியவற்றினால் அனுசரணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மீனவ சங்கத்தின் தலைவர் மற்றும் மனுசத் தெரண மற்றும் டயலொக் ஆசியாட்டா உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.