14th June 2025 18:04:18 Hours
1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வீட்டின் சாவியை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இத்திட்டம் 1 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. படையணி படையினரின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் நன்கொடையாளர்களின் பொருள் மற்றும் நிதி பங்களிப்பின் மூலம் இத்திட்டம் சாத்தியமானது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.