Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2023 21:20:48 Hours

1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 'ஹரித நியமுவோ' திட்டத்திற்கு பங்களிப்பு

விவசாய அறிவு மேம்பாடு மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 'ஹரித நியமுவோ' எனும் தொனிப்பொருளில் வயம்ப பயிற்சி நிறுவனத்தினால் 1 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி படையினருடன் இணைந்து அடுத்த தலைமுறையின் உலக உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்பதனை மையமாக கொண்டு சனிக்கிழமை (ஏப்ரல் 1) வாரியபொலவில் உள்ள வயம்ப பயிற்சி நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வில் தம்பதெனிய மகா வித்தியாலயம் மற்றும் நிக்கவெரட்டிய ஜெயந்தி நவோத்யா மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் 70 மாணவர்கள் கலந்துகொண்டனர். படையினர் உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களை வழங்குவதன் மூலம் இந்த விலைமதிப்பற்ற பாடநெறிக்கு உதவியதுடன் மாணவர்களுக்கான தத்துவார்த்த மற்றும் நடைமுறை குழு செயல்பாடுகளை உள்ளடக்கிய தலைமை பாடநெறிகளை நடத்துகிறது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிச்சிலன் மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கேஏஎஸ்பீ குமார ஆகியோர் இந்த திட்டத்திற்கான இராணுவத்தின் பங்களிப்பை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.