13th April 2025 19:05:03 Hours
2025 ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தற்போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில், ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை சுத்தம் செய்தல், பக்தர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் பக்தர்களை அரண்மனை வளாகத்திற்கு அழைத்துச் செல்ல தேவையான அணுகல் சாலைகளை அமைத்தல் ஆகியவை முதன்மையான பணிகளில் அடங்கும்.
2025 ஏப்ரல் 12 நிலவரப்படி, கண்காட்சியின் போது ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் சுகாதாரத்திற்குத் தேவையான அண்ணளவாக 135 எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் நிலைத்தன்மையிலுள்ள கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 5 கொள்கலன்கள், கூடாரங்கள் மற்றும் ஊனமுற்ற பக்தர்களுக்கான படிக்கட்டுகளுடன் கூடிய அணுகல் சாலைகள் ஏற்கனவே இராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், வரவிருக்கும் தானங்களுக்குத் தேவையான அண்ணளவாக 100 மேசைகளும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் வருகை 2025 ஏப்ரல் 17 முதல் எதிர்பார்க்கப்படுவதுடன், நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கை இராணுவம் செய்துள்ளது.