14th July 2023 20:56:27 Hours
59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் புதன்கிழமை (ஜூலை 12) வெளியேறும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
59 வது காலாட் படைப்பிரிவு தலையைகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து படையினருக்கு ஆற்றிய உரையில் தனது பதவிக்காலத்தில் அளித்த ஆதரவுக்கு அனைத்து நிலையினருக்கும் நன்றி தெரிவித்ததோடு நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே வேளையில் புதிய படைப்பிரிவு தளபதிக்கு அதே முறையில் மற்றும் உற்சாகத்துடன் ஒத்துழைக்குமாறு அவர்களை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் விழா நிறைவடைந்தது.
பின்னர் 59 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து நிலையினர் படைப்பிரிவின் சார்பாக பதவி விலகும் சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுப் சின்னம் வழங்கினர்.
இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.