Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2021 23:01:59 Hours

வெளியேறும் வன்னி தளபதி தனது கட்டளை அலகுகளுக்கு மரியாதை நிமித்தமான விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் தனது அலுலவகத்திலிருந்து வெளியேற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) 65 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

65 வது படைப்பிரிவுக்கு விஜயம் செய்த போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படை சிப்பாய்களால் 65 வது படைப்பிரிவு தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து தனது விஜயத்தின் நினைவாக மாங்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி , அனைத்து நிலைகளுக்கும் உரையாற்றினார்.