17th April 2024 17:11:39 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் வெளியேறும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களுக்கு 15 ஏப்ரல் 2024 அன்று பிரியா விடை வழங்கினர்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பமிடுவதன் மூலம் அவர் தனது பதவிக்காலம் முடிப்பதற்கு முன்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வருகை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அந்நாளின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வெளியேறும் தளபதி குழு படம் எடுத்துக் கொண்டதுடன் அலுவலக வளாகத்தில் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
படையினருக்கான தனது ஆற்றிய உரையில், கிழக்கு தளபதியாக தனது பதவிக்காலத்தில் அனைத்து நிலையினரால் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.
அன்றைய நாளுக்கான சம்பிரதாயங்கள் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துடன் முடிவடைந்தது, மேலும், அன்று மாலை அதிகாரிகள் உணவறையில் பிரியாவிடை விருந்தும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 23 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி, கிழக்கு வழங்கல் கட்டளை தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.