13th August 2021 09:00:33 Hours
வத்தளை புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பளர் நாயகமாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் சிரான் அபேசேகர அவர்களுக்கு பணிப்பகத்தின் சிப்பாய்களால் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக கௌரவம் வௌ்ளிக்கிழமை (30) வழங்கப்பட்டது.
இதன்போது படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், படையினரின் கூட்டு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாய நிகழ்விகளின் நிறைவில் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்தியிருந்ததோடு, அங்கு இடம்பெற்ற அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி சகலரும் கலந்துகொண்டனர்.
பணிப்பகத்தின் அதிகாரிகளும் சில சிப்பாய்கள் மாத்திரம் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர தற்போது இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.